வான்மறையும் வான்மழையும்

 மழை என்பது படைத்த இறைவனின் தனிப் பெரும் ஆற்றலாகும். அதிலும் இந்தியாவில் பொழிகின்ற பருவ மழை உண்மையில் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் ஆற்றலைப் பறை சாற்றுகின்ற அற்புதமாகும்.

தென்மேற்குப் பருவ மழை பெய்வதற்கு பூமியின் தென் அரைக் கோளத்தில் புறப்படுகின்ற காற்று வடக்கு நோக்கி வீசுகின்றது.

இந்தக் காற்று பூமியின் சுழற்சி காரணமாக தென்மேற்காக திசை திருப்பப்படுகின்றது. அவ்வாறு திசை திருப்பப்பட்ட காற்று அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல் ஆகிய மூன்று கடல்களின் ஈரப்பதத்தை சுமந்து கொண்டு கருவுற்ற காற்றாக வருகின்றது.

மராட்டியத்திலிருந்து கன்னியாகுமரி வரை 1600 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு 900 மீட்டர்கள் உயரத்திற்கு நெடிதுயர்ந்து நிற்கின்ற மேற்குத் தொடர்ச்சி மலைகளால் தடுத்து திருப்பப்படுகின்றது. அவ்வாறு தடுக்கப்பட்ட காற்று தான் மேல் நோக்கி எழுந்து தமிழ்நாடு, கிழக்குக் கடற்கரை பகுதிகளைத் தவிர உள்ள இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் மழையைப் பொழிவிக்கின்றது. இந்த மழைப் பொழிவு ஜூன் முதல் செப்டம்பர் வரை உள்ள காலத்தில் நிகழ்கின்றது. இது தான் தென்மேற்குப் பருவ மழை என்றழைக்கப்படுகின்றது.

அது போல் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில்  வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீசுகின்ற காற்று பூமி சுழற்சி காரணமாக வடகிழக்காக திசை திருப்பப்படுகின்றது. அவ்வாறு திசை திருப்பப்பட்ட காற்று இமயமலையால் தடுக்கப்பட்டு மேல் நோக்கி எழுந்து  தமிழ்நாடு மற்றும் கிழக்குக் கடற்கரைகளில் மழையைப் பொழிவிக்கின்றது. இது தான் வடகிழக்குப் பருவ மழை என்றழைக்கப்படுகின்றது.

இத்தகைய தீவிரமான பருவ மழைக் காற்று உலகில் வேறு எங்கும் தென்படாதவை. இந்தியத் துணைக் கண்டம், இலங்கை மற்றும் தெற்காசியா ஆகிய இடங்களில் மட்டுமே வீசுகின்றன. இயந்திரப் பயன்பாடு கண்டுபிடிக்கப்படாத காலத்தில் உந்தித் தள்ளுகின்ற இந்தப் பருவ காலக் காற்றுகளை பயன்படுத்தித் தான் அரபியர்கள் பாய்மரக் கப்பல்களில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டனர்.  பருவ காலத்திற்கு அரபியில் மவ்சிம் என்பதாகும். பின்னால் அது ஆங்கிலத்தில் விஷீஸீsஷீஷீஸீ மான்சூன் என்று மறுவியதற்குப் பின்னணியும் பின்புலமும் இது தான்.

இந்தியத் துணைக் கண்டத்தில் பெய்கின்ற இந்த மழைக்கு காற்று, மலைகள், கடல், பூமியின் சுழற்சி, பூமியின் சாய்வான அச்சு ஆகியவை காரணிகளாக அமைந்திருக்கின்றன. இவற்றை அல்லாஹ்வின் கீழ்க்கண்ட வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் அவனது வசனங்களை இந்தக் காரணிகளும் உண்மைப்படுத்துகின்றன.

15:22 وَاَرْسَلْنَا الرِّيٰحَ لَوَاقِحَ فَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَسْقَيْنٰكُمُوْهُ‌ۚ وَمَاۤ اَنْتُمْ لَهٗ بِخٰزِنِيْنَ‏

சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.

(அல்குர்ஆன்:15:22.)

77:27 وَّجَعَلْنَا فِيْهَا رَوَاسِىَ شٰمِخٰتٍ وَّ اَسْقَيْنٰكُمْ مَّآءً فُرَاتًا ؕ‏

அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம். இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம். (அல்குர்ஆன்:77:27.)

இந்த வசனம் முளை என்ற குறிப்பிடுவது மலையைத் தான். இந்த மலைகள் முளைகளாக மட்டுமல்லாமல், மழையை சேமித்து ஆறாகப் பகிர்கின்ற வேலைகளைச் செய்வதுடன் அவை காற்றுகளைத் தடுத்தும் மழையைத் தருகின்றன. இந்தியாவில் இந்த அற்புதம் மிக அற்புதமாக நடைபெறுகின்றது. அல்லாஹ்வின் இந்த சொற்பதம் தெளிவாக உணர்த்துகின்றது.

45:3 اِنَّ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰيٰتٍ لِّلْمُؤْمِنِيْنَؕ‏

45:4 وَفِىْ خَلْقِكُمْ وَمَا يَبُثُّ مِنْ دَآبَّةٍ اٰيٰتٌ لِّقَوْمٍ يُّوْقِنُوْنَۙ‏

45:5 وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ رِّزْقٍ فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَ تَصْرِيْفِ الرِّيٰحِ اٰيٰتٌ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ

நம்பிக்கை கொள்வோருக்கு வானங்களிலும், பூமியிலும் பல சான்றுகள் உள்ளன. உங்களைப் படைத்திருப்பதிலும், ஏனைய உயிரினத்தைப் பரவச் செய்திருப்பதிலும் உறுதியாக நம்பும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன. இரவு பகல் மாறிமாறி வருவதிலும், வானிலிருந்து அல்லாஹ் (மழைச்) செல்வத்தை இறக்கியதிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் (அதற்கு) உயிரூட்டுவதிலும், காற்றுகளைத் திருப்பி விடுவதிலும் விளங்கும் சமுதாயத்துக்குப் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன்:45:3-5.)


நமக்குக் கிடைக்கின்ற மழையில் இத்துணை காரணிகள் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன என்று இந்த வசனங்கள் பின்னி எடுத்து விட்டன. அல்குர்ஆன் மின்னிக் கொண்டிருக்கின்ற உண்மை வேதம் என்பதையும் உலகிற்கு உரத்து உரைத்து விட்டன.



Comments

Popular posts from this blog